தமிழகத்தில் ஆகஸ்ட் 23 வேலைவாய்ப்பு முகாம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி செய்யும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் படித்துவிட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அழகின் வாயிலாக படித்த வேலைவாய்ப்பற்ற ஆண் பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்க இருக்கிறது.
அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த முகாம் அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டாரங்களை சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்ளாலாம்.
TN TET தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் TET PAPER I முழு மாதிரி தேர்வு!!!
Exams Daily Mobile App Download
மேலும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அழகினை 04286 281131 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்