தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; இன்று மட்டும் 1702 பேருக்கு தொற்று உறுதி – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று மட்டும் 1702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பை பற்றிய அறிக்கையை தினசரி வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தினமும் 2000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. அரசு அறிக்கையின் படி, தமிழகத்தில் இன்று புதிதாக 1702 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 25,95,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திரையரங்கம் திறப்பு குறித்த முடிவு – அமைச்சர் தகவல்!
ஆகஸ்ட் 19ம் தேதியில் மட்டும் கொரோனா தொற்றினால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,892 பேர் தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,41,432 ஆக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று தமிழகத்தில் புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 19,864 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னையை பொறுத்தவரை இன்று 193 பேரும், கோவையில் 198 பேருக்கும், ஈரோட்டில் 147 பேருக்கும் அதிக பட்சமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.