தமிழ்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,933 பேருக்கு கொரோனா – 21 மாவட்டங்களில் புதிய பலி இல்லை!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்று 1,933 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றை விட பாதிப்பு இன்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்புகள் முன்னதாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு தீவிரமாக முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பல ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
டிவி சீரியலுக்கு வந்த நமீதா – பிரபல தொலைக்காட்சியின் சீரியலில் ஒப்பந்தம்!
அதன்படி, இன்று புதிதாக 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது. இன்று 34 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்று பாதிப்பின் மொத்த பலி எண்ணிக்கை 34,462 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 1,887 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதனால் மொத்தம் 25,30,096 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி, 20,411 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று மட்டும் 1,59,564 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் 3,94,85,640 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை ஒரே நாளில் 211பேர் இன்று ஒரு நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிப்புகளை குறைப்பதற்காக தமிழக அரசு பல தீவிர முயற்சிகளையும் செய்து வருகிறது.