தமிழகத்தில் இன்று 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்று மட்டும் 1,964 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
உலகின் கொடிய தொற்றான கொரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் குறித்து முன்னதாக மக்களிடம் அதிக விழிப்புணர்வு இல்லாத நிலையில் பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. தொடர்ந்து அரசு மக்களிடையே கொரோனா தொற்று குறித்து பலவழிகளிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கியது. அதன்பின்னர், படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், இன்று தமிழக சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 1964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 20,832 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 1917 பேர் மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 25,26,317 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பால் மாநிலத்தில் 34,395 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் 28 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.