பாரதி கண்ணம்மா சீரியல் ப்ரோமோவால் பொறுமையை இழந்த ரசிகர்கள் – வைரலாகும் பதிவு!
பாரதி கண்ணம்மா சீரியலில் பல வருடங்களாக புதைந்திருந்த விடையை அடைந்தவளாக லட்சுமி தனது அப்பா யாரென தெரிந்து கொண்டதை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவால் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா தொடரில் பல வருடமாக அப்பா யாரென தேடி அலைந்த லட்சுமியின் கேள்விக்கு பதில் கிடைத்ததால் பள்ளிக்கு செல்லாமல் அப்பா இருக்கும் இடத்திற்கு சென்று பேசுவதை முந்தைய எபிசோடில் பார்த்தோம். அதை தொடர்ந்து லட்சுமியை தேடும் கண்ணம்மா வீட்டிற்கு வந்து பார்த்த போது லட்சுமி வீட்டில் இருப்பதை கண்டு கண்ணீர் மல்க அழுது அவளிடம் எங்கு சென்றாய்? என்ற கேள்வியுடன் கட்டி அணைக்கிறாள். அந்த நேரம் பார்த்து கண்ணம்மா வீட்டுக்கு சவுந்தர்யாவும் வர, எல்லா உண்மையும் தெரிந்த லட்சுமி என் மேலே உனக்கு ஏன் பாட்டி இவ்வளவு அக்கறை? என்று குதர்க்கமாக கேள்வி எழுப்புகிறார்.
ராஜா ராணி 2′ சீரியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்த ஆலியா மானஸா – ரசிகர்கள் ஷாக்!
அப்போது லட்சுமியின் பேச்சில் வித்யாசத்தை கண்ட கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா. இவ்ளோ நேரம் எங்க இருந்த? என்று மீண்டும் கேட்க அவளோ அப்பாவை தேடி சென்றேன் என்று கூறுகிறாள். உடனே லட்சுமி சவுந்தர்யாவிடம் தனது அப்பாவை பற்றி வேண்டுமென்ற மோசமாக பேச அதை தாங்க முடியாமல் இருக்கும் சௌந்தர்யா மனதுக்குள் எங்கே நாம் உண்மையை உளறி விடுவோமோ என்ற பயத்தில் அங்கிருந்து கிளம்புகிறார். அனைத்தையும் கவனிக்கும் கண்ணம்மாவுக்கு லட்சுமியின் பேச்சு அனைத்தும் புதிதாக தெரிகிறது.
இந்த பக்கம் பாரதி கண்ணம்மாவின் உண்மையை பற்றியும், உன் அப்பா பாரதி தான் என்று லட்சுமியிடம் சொல்ல துடிக்கும் அகிலனை மனைவி அஞ்சலி தடுக்கிறாள். இதற்கிடையில் லட்சுமி சிந்திக்க ஆரம்பிக்கிறார். எப்படியாவது ஹேமாவுடன் சேர்ந்து இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என முடிவு எடுக்கிறார். இதை தொடர்ந்து நேற்று வெளியான ப்ரோமோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இந்த சீரியலுக்கு ஒரு எண்டு கார்டே கிடையாது இனி மேலும்,இதை பார்ப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை என பல கமெண்டுகளை கூறி வருகின்றனர்.