IPL T20 கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி? வெளியான தகவல்!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் வருகிற செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி:
உலக நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. ஆனால் போட்டி தொடங்கப்பட்டு சில நாட்களில் பல கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதனால் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் & அறிஞர்களுக்கு விருது – கமல்ஹாசன் கோரிக்கை!
மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் அறிவித்தது. இந்நிலையில் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே அமீரகம் சென்று விட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த போட்டிகளில் பார்வையளர்கள் நேரடியாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷிபர் உஸ்மானி கூறுகையில், பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார். அமீரகத்தில் கிரிக்கெட்டை விரும்பும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே ஐபிஎல் போட்டியின் போது மைதானங்களில் 60 சதவீத ரசிகர்களை அனுமதிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.