IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு சூப்பர் நியூஸ்! மெகா ஏலத்தில் கேப்டன் MS தோனி!
இந்த ஆண்டுக்கான IPL தொடர் வருகிற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கவுள்ளது. IPL வீரர்களுக்கான மெகா ஏலம் தொடங்க இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. இதற்காக CSK அணி கேப்டன் MS தோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
ரசிகர்கள் உற்சாகம்:
ஐபிஎல் மெகா ஏலம் வருகிற பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது . ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்கும். இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதில் கோடிக்கணக்கான ரூபாயில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி BCCI அறிவிப்பின் படி 4 வீரர்களாகிய தோனியை 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடி க்கும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – இனி ஆன்லைன் மூலம் எக்ஸிட் தேதி மாற்றலாம்!
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏலம் குறித்து கூடிய விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதற்காக CSK அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்த 10 ஆண்டுகளை மனதில் வைத்து அதற்கான அணியை தயாரிக்கும் படி இக்கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் CSK ஹெட் கோச் பிளெமிங் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் அதிக இளம் வீரர்களை அணியில் எடுக்க CSK அணி திட்டம் போட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.1 முதல் கல்லூரிகள் திறப்பு – ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள்! அமைச்சர் அறிவிப்பு!
அதே நேரத்தில் சீனியர்களையும் கைவிட்டு விட கூடாது என்ற நிலைப்பாட்டில் தோனி இருப்பதாக தெரிகிறது. இதனால் டுபிளஸி, பிராவோ, லுங்கி கிடி, அம்பத்தி ராயுடு, சர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்ற சென்னைக்காக விளையாடிய வீரர்களை தோனி குறிவைக்க உள்ளார். கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் CSK அணி IPL கோப்பையை வெல்லவும் மேலும் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் பிப்ரவரி மாதம், நடக்கும் மெகா ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK அணி திட்டமிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 15 வது IPL சீசன் ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.