UPSC தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு!
இந்தியாவில் மத்திய அரசு நடத்தும் 2022 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக முதன்மை தேர்வு நடைபெற உள்ளது.
UPSC:
இந்தியாவில் மத்திய மாநில அரசு துறை பணியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் போட்டித் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. இதனால் பணியில் உள்ள ஊழியருக்கு பணி சுமையும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கில் அவ்வப்போது அரசு தளர்வுகளை அளித்து வந்த நிலையில் போட்டித்தேர்வுகளை நடத்தி காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய கோரிக்கைகள் எழுந்தது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மற்ற தேர்வுகளை தொடர்ந்து UPSC தேர்வுக்கான அறிவிப்பும் வெளியானது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் A மற்றும் குரூப் B ஆகிய தேர்வுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குடிமைப் பணிக்கான தேர்வை எழுத விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குடிமைப் பணித் தோ்வானது முதல்நிலை, பிரதானத் தோ்வு மற்றும் நோ்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது. நடப்பாண்டு 2,65,468 பணியாளர்கள் UPSC, SSC, போன்ற தேர்வு வாரியங்கள் மூலம் தேர்தெடுக்கப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பபடும் என்று UPSC தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு – தகவல் வெளியீடு!
அந்த வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் 861 காலியிடங்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் 5 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்ததாக முதன்மைத் தேர்வும் நேர்காணலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.