UPSC சிவில் சர்வீஸ் தேர்வர்கள் கவனத்திற்கு – முதன்மை தேர்வு தேதி அறிவிப்பு!
இந்தியாவில் IAS, IPS போன்ற பணியிடங்களுக்காக நடத்தப்படும் UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
UPSC:
இந்தியாவில் ஆண்டுதோறும் IAS, IPS போன்ற குடிமைப் பணிகளுக்கான UPSC தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த UPSC தேர்வானது 3 படிநிலைகளாக நடைபெறும். அதாவது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகும். அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான UPSC தேர்வின் முதல் நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இத்தேர்வை எழுத சுமார் 11.52 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அதில் 5.5 லட்சம் பேர் மட்டுமே தேர்வை எழுதினர். அதன் தொடர்ச்சியாக ஜூன் 22ம் தேதி UPSC முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த ஆண்டு விரைவாகவே முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த முதல்நிலை தேர்வில் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழகத்தை சேர்த்தவர்கள் மட்டும் 610 பேர் ஆவார்கள். இவர்களுக்கான அடுத்த கட்ட முதன்மை தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என்று மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வானது தொடர்ந்து 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. முதல் நாள் செப்டம்பர் 16ம் தேதி அன்று காலை கட்டுரை வடிவில் தேர்வு நடைபெறும். அடுத்ததாக செப்டம்பர் 17ம் தேதி காலை பொது அறிவு தேர்வு நடைபெறும்.
தமிழக அரசு கலை & அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை – இன்று முதல் துவக்கம்
அதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மூன்றாம் தாளான பொது அறிவு பகுதி 2 தேர்வும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதி காலை மொழித் தேர்வு நடைபெறும், நாடு முழுவதும் சுமார் 24 மையங்களில் இந்த UPSC முதல் நிலைத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இந்த நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.