தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகள் கவனத்திற்கு – திண்டுக்கல்லில் நாளை மெகா முகாம்!
தமிழகத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் சார்பாக நடக்கும் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் உள்ள படித்த வேலையற்ற இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்புத் துறை சார்பாக பல வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படவில்லை. இதனால் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.
Exams Daily Mobile App Download
இது மட்டுமல்லாமல் கொரோனா காலகட்டத்தில் புதிதாக எந்த வேலை வாய்ப்பையும் தனியார் நிறுவனங்களும் இளைஞர்களுக்கு புதிதாக அறிவிக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் படித்த வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தின் சார்பாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருப்பதாக தொழில் வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குனர் பிரபாவதி அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் PM கிசான் கடன் அட்டை & பயிர் காப்பீட்டுத் திட்டம் – முழு விபரங்கள் இதோ!
விருப்பமுள்ள இளைஞர்கள் நாளை காலை 10.30 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்திற்கு நேரில் சென்று தங்களது சுய விபரக் குறிப்புகளுடன் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு இருக்கின்றன. என்னென்ன தகுதி பெற்ற இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்பது குறித்த அனைத்து விவரங்களையும் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்திற்கு 9499055924 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.