TRB முதுகலை பட்டதாரி தேர்வர்கள் கவனத்திற்கு – தகுதித்தேர்வு ஒத்திவைப்பு!
தமிழக அரசு பள்ளிகளுக்கான முதுநிலை ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித்தேர்வை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவலால் ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமும் கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகளில் தாமதம் நிலவுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றன. இதனால் காலிப்பணியிடங்களை உடனடியாக பூர்த்தி செய்யும் படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்க வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஜன.15 கடைசி நாள்..!
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. ஏராளமானோர் இத்தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர்கள் ஆகிய பதவிகளுக்கான போட்டி தேர்வு வரும் 29ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் ஓமிக்ரான் மற்றும் கொரோனா தாக்கம் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரின் தேர்வில் மாற்றம்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
அதன் படி ஜனவரி 29ம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பிப்ரவரி 12 முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்கான விரிவான அட்டவணை தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிடப்படும். மேலும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வு அட்டவணை கொரோனா தொற்று சூழலை பொறுத்து மாறுபட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.