ரயில் பயணிகள் கவனத்திற்கு – மீண்டும் சேவைகள் துவக்கம்!
கொரோனா காலகட்டத்தின் போது நிறுத்தம் செய்யப்பட்ட விழுப்புரம், திருவாரூா், திருநெல்வேலி ஊர்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன. இதனால் ரயில் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ரயில்சேவை:
தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தின் போது சில முக்கிய ரயில் சேவைகள் நிறுத்தம் செய்யப்பட்டன. அதன்பின்னர் கொரோனா பரவல் குறைய குறைய பழையபடி அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டன. ஆனாலும், சில ரயில் சேவைகள் மட்டும் துவங்கப்படாமல் இருந்ததால் மீண்டும் துவங்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனிடையே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட விழுப்புரம், திருவாரூா், திருநெல்வேலி ஊர்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
மேலும், பயணிகள் ரயில்கள் சிறப்பு கட்டண விரைவு ரயிலாக மாற்றப்பட்டு தொடங்கப்பட்டு வருகிறது. தற்போது எந்தெந்த ரயில் சேவைகள் மீண்டும் துவங்கவுள்ளன என்பதை பார்க்கலாம். அதாவது, மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் சிறப்பு விரைவு ரயிலாக நேற்றில் இருந்து துவங்கப்பட்டுள்ளது. அதே போல மயிலாடுதுறையில் இருந்து திருநெல்வேலி செல்லும் பயணி ரயில் சிறப்பு ரயிலாக நேற்று முதல் இயங்கத் தொடங்கி இருக்கிறது. மேலும், திண்டுக்கல் வரைக்கும் இயங்கும் ரயிலை திருநெல்வேலி வரைக்கும் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது || சற்று முன் வெளியானது!
இதனையடுத்து, விழுப்புரத்தில் இருந்து தினமும் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் ரயில் மயிலாடுதுறைக்கு மாலை 5.45 மணிக்கு வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூருக்கு செல்லும் ரயில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதால் குறைவான பயணிகளே ரயிலில் பயணம் செய்திருக்கின்றனர். மேலும், ரயில் கட்டணத்தையும் முன்பு போலவே குறைக்கும்படி ரயில்வே நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.