ரயில் பயணிகளின் கவனத்திற்கு – பயணிக்க இது கட்டாயமா? முழு விபரம் இதோ!
ரயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து தற்போது ரயிலில் பயணிப்போரிடம் TTR செக்கிங் செய்யும் போது நீங்கள் இந்த ஆவணத்தை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இதனை காண்பிக்க தவறும் போது நீங்கள் அபராதத் தொகை செலுத்த வேண்டும்.
பயணிகள் கவனத்திற்கு
இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக ரயில் பயணம் உள்ளது. அத்துடன் நீண்ட பயணத்திற்கு ரயில் பயணமே உகந்ததாக அமைகிறது. இதில் டிக்கெட்டுகள் மிகவும் மலிவான விலையில் கிடைப்பதால் சாமானிய மக்கள் கூட இதில் நாள்தோறும் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக ரயில்வே வாரியம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பயணிகளின் நலனுக்காக ரயில்வே வாரியம் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் நீங்கள் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் போது TTR உங்களின் டிக்கெட்டுகளை செக்கிங் செய்வது வழக்கமாகும். அத்துடன் அவ்வாறு வரும்போது பயணிகளிடம் ஆதார் கார்டும் சோதனை செய்யப்படும். ஆனால் சில நேரங்களில் நீங்கள் ஆதார் கார்டை மறந்துவிட்டால் அபராத தொகை செலுத்த வேண்டியிருக்கும். இப்போது நீங்கள் ரயிலில் பயணிக்கும் போது ஆதார் கார்டு எடுத்து செல்வது கட்டாயமா என்பதை பற்றி பார்ப்போம். பொதுவாக ரயிலில் பயணம் மேற்கொள்ளும்போது உங்களின் தனிநபர் அடையாள அட்டைகளுள் ஒன்றை எடுத்து செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை – முக்கிய விதிகள் வெளியீடு!
அத்துடன் IRCTC விதிமுறைப்படி, ரயில் பயணிகள் 12 வகையான அடையாள ஆவணங்களை எடுத்து செல்ல அனுமதிக்கிறது. அதன்படி நீங்கள் பான் கார்டு, மத்திய – மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை, மாணவர் அடையாள அட்டை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பாஸ்புக், புகைப்படம் அடங்கிய கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு, இ-ஆதார் கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட 12 ஆவணங்களை கொண்டு செல்லலாம். இதே போல் டிஜி லாக்கர் ஆப்பில் உள்ள ‘issued document’ பிரிவில் உள்ள ஆதார் கார்டு அல்லது டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளும் ஏற்று கொள்ளப்படும். இதில் வெளிநாட்டினர்கள் தங்கள் நாட்டின் பாஸ்போர்ட் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.