ரயில் பயணிகள் கவனத்திற்கு – புதிய வசதி அறிமுகம்!
இந்தியாவில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ரயில்களில் உணவுகளை வாங்கும் போது க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
புதிய வசதி அறிமுகம்;
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் ரயில் பயணத்தில் தான் படுத்துத் தூங்கிக்கொண்டே நிம்மதியாகப் பயணிக்க முடியும். இந்த வசதி மற்ற போக்குவரத்து சேவைகளில் இல்லை. இருப்பினும் ரயில்களில் எல்லா வசதிகள் இருந்தாலும், மிகப்பெரிய குறை உணவு வசதிதான். ரயில் பயணிகளுக்கு பயணத்தின் போது உணவு கிடைப்பது, பெரும் சிக்கலாக இருந்தது.
Exams Daily Mobile App Download
அந்த நிலையில் வெளியில் இருந்து உணவு விற்பனையாளர்கள், அதிக விலைக்கு உணவுகளை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ரயில்வே நிர்வாகமே கேட்டரிங் பிரிவை உருவாக்கியது. அதாவது பயணிகள் தங்களுக்குத் தேவையான உணவைப் பணம் கொடுத்து வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம். தற்போது சதாப்தி, தேஜஸ், துரந்தோ, மற்றும் ராஜ்தானி ரயில்களில் ரயில் டிக்கெட் உடனேயே பயணிகளுக்கான உணவும் சேர்ந்து வசூலிக்கப்படுவதால் பயணிகள் உணவைத் தனியாகக் காசு கொடுத்து வாங்கத் தேவையில்லை. மற்ற பேன்டரி உள்ள ரயில்களில் மக்கள் காசு கொடுத்து தங்களுக்கான உணவை வாங்கிக் கொள்ள வேண்டும்.
புதிதாக ரேஷன் கார்டு பெற “இவை” கட்டாயம் – அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் பேன்டரி இல்லாத ரயில்களில் ரயில்வே நிர்வாகம் சார்பில் பேஸ் கிச்சன் நடத்துபவர்கள் ஊழியர்கள் மூலம் உணவுப் பொருட்களை விற்பனை செய்வார்கள். இந்நிலையில் ரயில்களுக்குள் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலை என்பது அதிகமாக இருப்பதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இந்நிலையில் ரயில்களில் உணவுகளுக்காகப் பணம் மட்டுமே செலுத்த முடியும் என்று இருந்த நிலையில் ரயில்வே நிர்வாகம் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியை முன்னதாக அறிமுகப்படுத்தினர். ஆனால் மக்கள் பலர் அதைப் பயன்படுத்துவதில்லை. இதையடுத்து தற்போது ரயில்வே நிர்வாகம் க்யூ ஆர் கோடு மூலம் ரயிலில் விற்பனை செய்யப்படும் உணவிற்காகப் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.