ரயில் பயணிகள் கவனத்திற்கு – 40 ரயில்கள் ரத்து! பொதுமக்கள் அவதி!
இந்தியாவில் ரயில் சேவை தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் ரயில் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். 94 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 340 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரயில்கள் ரத்து:
இந்தியாவில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் இதுவரை நேரடி தேர்வு முறை மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களின் ஓய்வு காலம் 60 வயது ஆகும். இந்த நிலையில் மத்திய அரசு ராணுவத்தில் ஆட்கள் சேர்க்க அக்னி பாத் என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி ஒருவர் 4 ஆண்டுகள் ராணுவத்தில் குறுகிய கால வீரராக மட்டுமே பணியில் சேர முடியும். மேலும் 4 வருட பணியில் 6 மாதம் இவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த திட்டத்தின் மூலம் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் மாதம் 30,000 ரூபாய் வழங்கப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளுள் சம்பள உயர்வும் அளக்கப்படும். நான்கு வருடம் நிறைவடைந்த பிறகு விருப்பமுள்ளவர்கள் 15 வருட ஒப்பந்தத்தில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இந்த அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்தின் திறன் பாதிக்கப்படும். ராணுவ வீரர்களின் திறன் பாதிக்கப்படும் இந்த திட்டம் காரணமாக ராணுவத்தில் ஒழுங்கு கெட்டுவிடும் என்று கருத்து தெரிவித்தனர். 4 வருடத்திற்கு பின் வெளியே வரும் அக்னி வீரர்கள் வேலை இன்றி கஷ்டப்படுவார்கள். மேலும் இவர்களை தீவிரவாத இயக்கங்கள் அணுக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழக ஆவின் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!
அதனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. மேலும் போராட்டக்காரர்கள் ரயில்களுக்கு தீ வைத்து ரயில் சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 94 விரைவு ரயில்கள் 140 பயணிகள் ரயில் உட்பட 340 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.