TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – முழு விபரம் இதோ!
தமிழகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு tnpsc சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலையும் நிறைய பேர் விண்ணப்பித்து வருகின்றனர்.
TNPSC குரூப் 4:
தமிழ்நாட்டில் நிலவி வந்த கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழக அரசு பல வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் வைத்து இருந்தது. இந்நிலையில் தற்போது ஊரடங்கின் நிறைய தளர்வுகளை விடுத்துள்ளது அரசு. அதன் காரணமாக சமீபத்தில் tnpsc குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து அடுத்ததாக TNPSC குரூப் 4 தேர்வுகள் குறித்தும் அறிவித்து உள்ளது. குரூப் 4 தேர்வுக்கு Syllabus தயாரிப்பு பணி ஓரிரு தினங்களில் முடிவு பெறும் என்றும், மார்ச் மாதத்தின் மத்தியில் குரூப் 4 தேர்வுக்கான அட்டவணையை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் முன்னரே தெரிவித்து இருந்தனர்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோர் கவனத்திற்கு – சான்றிதழ் விநியோகம்!
இந்நிலையில் சமீபத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான பதவிகள் குறித்த அறிவிப்புகளும் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் 274 பதவிகள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3593, ஜூனியர் அசிஸ்டெண்ட் 88, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கீழ் வரும் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
Wipro நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ!
அதனை தொடர்ந்து 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்காக நிரப்பப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் அறிவித்து உள்ளது. அறிவிப்பு வெளியானது முதல் ஆன்லைனில் www.tnpsc.gov.in, www.tnpscexams.in விண்ணப்பித்தல் பணி தொடங்கியது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், முதல் நாளான நேற்று நிறைய பேர் விண்ணப்பித்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலையும் நிறைய பேர் விண்ணப்பித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.