Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – வந்தாச்சு புது ரூல்ஸ்!
பொருளாதார நெருக்கடி காலத்தில் நமக்கு பெரும் உதவியாக இருப்பது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் தான். மேலும் பெண் குழந்தைகளுக்காக மிகச்சிறந்த திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இந்த திட்டமானது இந்திய தபால் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
புதிய விதிமுறைகள்:
இன்றைய காலகட்டத்தில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். ஏனெனில் வரி சலுகையுடன் உள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்கள். குறிப்பாக குழந்தைகளுக்கான திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், இது தவிர இன்னும் பல சேமிப்பு திட்டங்கள் என பலவற்றையும் வழங்கி வருகின்றது. அஞ்சலகங்களிலும் வங்கிகளில் உள்ளதை போலவே சேமிப்புக் கணக்குகள் உள்ளது. அதோடு இன்றைய காலகட்டத்தில் வட்டி விகிதம் என்பது வங்கிகளில் பெரியளவில் இல்லை. மத்திய அரசு பெண் குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அவற்றில் மிகவும் முக்கியமானது சுகன்யா சம்ரிதி யோஜனா என்று கூறப்படும் செல்வ மகள் சேமிப்பு திட்டமாகும். வெகுமக்களிடையே இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பெண் குழந்தைகளின் உயர்கல்வி, தொழில், திருமணம் போன்றவற்றை இலக்காக வைத்து செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். பெண் குழந்தையின் பெற்றோர்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது மிகப்பெரிய தொகை அவர்களுக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும்.
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் மே 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
1. தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும். அதற்கு முன் 10 வயதை தாண்டிய பெண்களே கணக்கை பயன்படுத்தலாம்
2. முன்பு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். அல்லாவிட்டால் கணக்குக்கு வட்டி வராது. ஆனால் தற்போது 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
3. தற்போது, மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்துவிட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை மூடிக்கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும்.
4. முன்பு ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், தற்போதைய விதிமுறைப்படி, முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.