தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்கள் கவனத்திற்கு – மே 22 ஆம் தேதிக்குள் மனு!
தமிழகத்தில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் செயல்படும் நகைக்கடன் வழங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் தமிழக அரசின் ஆணையின்படி பொது நகைக்கடன் தள்ளுபடி திட்டம் 2021ன் கீழ் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவா்கள் மனு அளிக்கலாம் என தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் தெரிவித்துள்ளார்.
மே 22 ஆம் தேதிக்குள் மனு:
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட அளவு நகைகளை அடகு வைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் நகைக்கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரியவந்தது.
எனவே இது குறித்து ஆய்வு செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பின் படி, நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்க சிறப்பு தணிக்கை நடைபெற்றது. இதை அடிப்படையாக வைத்து, நகைக்கடன் தள்ளுபடி பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி சுமார் 13 லட்சம் பேர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியுடையவர்கள் என்றும், 35 லட்சம் பேர் தகுதி இல்லாதவர்கள் என்று தெரியவந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Exams Daily Mobile App Download
இதனால் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி பெறாதோர் தங்களின் ஆட்சேபனை மற்றும் மேல்முறையீட்டு மனுக்களை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தஞ்சாவூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.தமிழ்நங்கை தெரிவித்திருப்பது, தஞ்சாவூர் மாவட்டத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக குறைப்பு? வலுக்கும் கோரிக்கை!
இந்த பட்டியல் படி, நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காதவர்கள் தங்களது மேல்முறையீட்டு மனுக்களை பட்டியல் வெளியிடப்பட்டதிலிருந்து, ஒரு மாத காலத்துக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே கடன் தள்ளுபடி பெற நிபந்தனைகளின் படி, தகுதியிருந்தும் பட்டியலில் இடம் பெறாதவா்கள் தகுந்த ஆதாரத்துடன் தங்களது மேல்முறையீட்டு மனுக்களை எழுத்துப் பூா்வமாக, தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை சரகத் துணைப் பதிவாளா்களிடம் மே 22 ஆம் தேதிக்குள் அளிக்கலாம் என கூறியுள்ளார்.