தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கவனத்திற்கு – வீடு வீடாக சென்று அழைக்க முடிவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து வகையான தொழிற்துறைகளும் வணிக துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொது இடங்களில் பொது மக்கள் கட்டாயம் முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் எப்போது? சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!
அத்துடன் கொரோனா பரவல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மாதத்திற்கு ஒருமுறை என மாற்றியுள்ளது. இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 19 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து நாளை இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. மேலும் முதல் தவணை அல்லது 2வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை மாநகரில் உள்ள தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு செலுத்தப்பட உள்ளது. மேலும் இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ஜெகதீசன் கூறியது, சென்னையில் இதுவரை 14 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அத்துடன் இதில் முதல் தவணை 2,40,000 பேர் மற்றும் 2வது தவணையை 13 லட்சம் பேர் செலுத்தாமல் உள்ளனர். இவர்களின் விவரங்கள் சுகாதாரத்துறை ஊழியர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் இவர்களின் வீட்டிற்கு சென்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தை பற்றியும் தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வு குறித்து கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.