தமிழகத்தில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு கவனத்திற்கு – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் சென்னையில் இருக்கும் பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக எந்தெந்த வழித்தட எண்கள் கொண்ட பேருந்துகள் எந்த இடத்துக்குச் செல்லும் போன்றவற்றை பொதுமக்கள் போன் மூலம் எளிதாக பார்க்க ஒரு ஆப் அறிமுகப்படுத்தி உள்ளது. அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
பெருநகர போக்குவரத்து கழகம்:
தமிழகத்தில் உள்ள சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் அரசின் சார்பில் இயங்கும் பேருந்துகளைப் பயன்படுத்துவதை குறைத்து, ரயில், ஆட்டோ, டாக்ஸி ஆகியவற்றில் பயணம் செய்வதையே பொதுமக்கள் மிகவும் விரும்பி வருகின்றனர். அதற்கு காரணம் அரசு பேருந்துகள் சரியான நேரத்துக்கு வருவது இல்லை என்றும், அவ்வாறு வந்தாலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது போன்ற புகார்களும் எழுந்து வருகிறது. மேலும் அரசு பேருந்தின் வழித்தட எண்ணைக் கண்டுபிடித்து பயணம் செய்வது சிக்கலாக உள்ளது போன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் தற்போது பெருநகர போக்குவரத்து கழகம் தற்போது சென்னையில் பேருந்து பயணங்களை எளிமையாக்க ‘சென்னை பஸ்’ என்றஆப் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் அந்த செயலியின் மூலம் ரயில் நிலையங்கள் மற்றும் நகரத்தில் உள்ள பிற முக்கிய இடங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் மக்கள் பயணம் செய்ய முடியும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடந்த புதன்கிழமை இந்த செயலியை அறிமுகப்படுத்தி பேசியுள்ளார். மேலும் இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் கீழே முழுமையாக பார்ப்போம்.
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அடுத்த வாரத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை!
முதலில் ‘சென்னை பஸ்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து, பயனாளர் ஒருவர் ‘பஸ் ரூட்’ விருப்பத்தை கிளிக் செய்து, வழித்தட எண்ணை உள்ளிடும்போது, அனைத்து இயக்கப்படும் பேருந்துகளும் திரையில் காட்டப்படும். அதன் பின்னர், இரண்டு நிறுத்தங்களுக்கு இடையே ஓடும் பேருந்துகளின் இருப்பிடத்தைப் பார்க்க, யூசர் ’ரூட் ஆப்ஷனை’ கிளிக் செய்ய வேண்டும், இதன் மூலம், பேருந்துகள் வரும் நேரத்தை அறிந்து கொள்ளலாம். மேலும், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால், பயணிகள் உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இல்லையென்றால், காவல்துறை அதிகாரிகளுக்கும் பஸ் ஆப் மூலம் பேரிடர் சிக்னல்களை அனுப்பி கொள்ளலாம். அதன் மூலம் பயணிகள் எளிதாக அணுகுவதற்கு வசதியாக, SOS பட்டனும் இந்த செயலியில் கொடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பல நன்மைகள் இருக்கும் இந்த செயலி குறித்து பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களும் கேட்கப்படுகிறது.