திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தற்போது நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது குறித்து தேவஸ்தானம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இலவச தரிசன டிக்கெட்
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் பக்தர்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே ஆன்லைன் முறையில் வெளியிட்டப் பட்டது. அத்துடன் இதனை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை காஜல் அகர்வால் – ரசிகர்கள் வாழ்த்து! வைரலாகும் பதிவு!
இப்போது கொரோனா பரவலின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் குறையத் தொடங்கி உள்ளதால் பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இலவச தரிசன டிக்கெட் நேரடியாக வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிகளவு கோவிலுக்கு வருகை தந்தனர். அதனால் மிகவும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டிக்கெட் வழங்கப்படாமல் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
இதனால் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று அதன் பிறகு ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது. அதிலும் குறிப்பாக சில நேரங்களில் 8 மணி நேரம் கூட காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளது. அதன் காரணமாக பக்தர்களின் நலன் கருதி மீண்டும் நேரம் ஒதுக்கப்பட்ட இலவச தரிசன டோக்கன்கள் மீண்டும் வழங்குவது தொடர்பாக தேவஸ்தானம் பரிசீலினை மேற்கொண்டு வருவதாக திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் குமார் ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.