தமிழகத்தில் கொரோனா இழப்பீடு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் கொரோனா இழப்பீடு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா இழப்பீடு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா இழப்பீடு பெற திட்டமிடுவோர் கவனத்திற்கு – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு நிவாரண தொகையாக தமிழக அரசு ரூ.50,000 வழங்கி வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இது தொடர்பான உத்தரவு ஒன்றை தற்போது பிறப்பித்துள்ளது.

கொரோனா இழப்பீடு:

உலகம் முழுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி பலியாயினர். இதனால் பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து கொண்டிருக்கின்றனர். அந்த குழந்தைகளுக்கு உதவும் வகையில் அரசு நிவாரண தொகையாக ரூ.50,000/- வழங்கபட்டு வருகிறது. பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகள் www.tn.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று இறப்பை உறுதி செய்யும் குழுவின் (Death Ascertaining Committee) மூலமாக மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

TN TRB தேர்வுக்கு விண்ணப்பித்து இருப்போர் கவனத்திற்கு – TET தயாராவது எப்படி? எளிய வழிமுறைகள்!

இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 நபர்களுக்கு ரூ.50,000/- நிவாரண தொகையாக வழங்கப்பட்டுள்ளது. 13,204 மனுக்கள் இருமுறை அனுப்பப்பட்டுள்ளதாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும், பலரும் இன்னும் நிவாரண தொகை கிடைக்கவில்லை என குற்றம் சாட்டினர். இந்த குழப்பத்தை போக்க உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதாவது, கடந்த மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னால் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால் அந்த மனுதாரர்கள் வரும் மே 18 ஆம் தேதிக்குள் மனு சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – ஏப்ரல் 26 கடைசி நாள்!

மேலும், மார்ச் 20 ஆம் தேதிக்கு பின்னால் கொரோனா தொற்றினால் இறந்திருந்தால் அந்த மனுதாரர்கள் இறந்து 90 நாட்களுக்குள் மனு சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் அனைத்திற்கும் நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும், மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அந்தந்த மாவட்ட வருவாய் அலுவலரிடம் (District Revenue Officer) முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் மனு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பரிசீலனை செய்து தீர்வு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!