தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் மாணவர்களுக்கு ஜூன் 20 ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருக்கிறார்.

பள்ளிக்கல்வித்துறை:

மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகாமையில் உள்ள பில்லர் மையத்தில் பள்ளி கல்வித்துறை சார்ந்த அலுவலர்களுக்கான மேம்பாட்டு பயிற்சியை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அதன் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் தமிழக முதல்வர் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு விரைவு தேர்வு ஜூலை மாதத்தில் நடைபெறும் என்றும் கூறியிருக்கிறார்

Exams Daily Mobile App Download

அதுமட்டுமின்றி, வருகிற 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவிலேயே தமிழகம் கல்வித்துறையில் உயர்வான இடத்திற்கு செல்வதற்காக தமிழகம் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். மேலும், தொடக்க பள்ளிகளில் கட்டிடங்கள் சீரமைக்க பல நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளை சேர்ப்பதற்கு படையெடுத்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, பள்ளிகளில் வழங்கப்படும் 10 விதமான இலவச பொருட்களை யாரும் விலைக்கு விற்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருக்கிறார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பயணப்படி மீண்டும் உயர்வு! அரசாணை வெளியீடு!

அதன்பின், தமிழக முதல் அமைச்சர், தமிழகத்திற்கு தேசிய கல்விக்கொள்கை அறமே வேண்டாம் என்று தமிழக மாநில கல்விக் கொள்கை அறிவித்திருந்தார். இந்த மாநில கல்விக் கொள்கை கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார். கூட்டங்கள் மூலம் பெறப்பட்ட தகவல்களை கொண்டு மாநில கல்வி கொள்கை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வருடம் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதால், அதிகமான ஆசிரியர்கள் இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும், 11ம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!