தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஷாக் அறிவிப்பு!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – ஷாக் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருந்து பெற்று வந்த நிலையில், தற்போது விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழ் நாடு அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வருகின்றனர். மேலும் இந்த திட்டத்தின் மையமாக வைத்து தமிழக அரசு நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் மற்றும் இது போன்ற இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்திய அரசு. அதன் படி இந்த திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்முறை படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 69 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

TCS நிறுவன ஊழியர்களுக்கு குட் நியூஸ் – ’25X25 மாடல்’ பயன்முறை அறிமுகம்!

இந்த நிலையில் சமீபத்தில் கடந்த சில காலங்களாக மக்கள் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து மாதக் கணக்கில் காத்திருந்து பெற்று வந்த நிலையில், தற்போது விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்து, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகம் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையே காண முடிகிறது. அதனால் சமூக ஆர்வலர்கள் சிலர் இதுகுறித்து பேசியுள்ளனர்.

ராஜ்யசபா வேலைவாய்ப்பு – 100 + காலிப்பணியிடங்கள்

அது என்னவென்றால், புதிய அட்டை கோரி விண்ணப்பித்தோருக்கு 15 நாட்களுக்குள் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய அட்டை கேட்டு மனு கொடுத்தவர்களின் விவரங்களைப் பதிவேடுகளில் ஏற்றி மனு என்ன நிலையில் உள்ளது என்பதைப் பொதுமக்களுக்கு தெளிவாக அறிவித்தால், மக்களின் சிரமம் குறையும். ஆனால், சென்னையில் உள்ள உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் சுமார் 10 ஆயிரம் புதிய அட்டைகள் அச்சிட்டு வழங்க வேண்டியுள்ளது. மக்களின் சிரமத்தை குறைக்க உடனடியாக புதிய ரேஷன் அட்டைகளை அச்சிட்டு உரியவர்களுக்கு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!