PPF திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 5க்குள் இதை செஞ்சா அதிக லாபம்!
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் தபால் நிலையங்களிலும் வங்கிகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு பிரபலமான சேமிப்பு திட்டமாகும். PPFகணக்கின் ஒரு நிதியாண்டில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது மற்றும் பணம் ஆண்டுதோறும் கூடும் என்பதன் மூலம் நன்மைகள் கிடைக்கின்றன.
அதிக லாபம் தரும் PPF திட்டம்:
பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் மிகவும் பிரபலமான வடிவங்களில் ஒன்றாகும். கணக்கு முதிர்ச்சியடையும் முன் ஒரு முதலீட்டாளர் பிபிஎஃப்பில் 15 நீண்ட ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி அதன் சந்தாதாரர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் விலக்கு-விலக்கு-விலக்கு (EEE) பிரிவின் கீழ் வருவதால் பலவிதமான நன்மைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு குறைந்தபட்ச முதலீடு ரூ.500 மற்றும் அதிகபட்ச வரம்பு ரூ.1,50,000 ஆகும். இதில் மாதாந்திர பங்களிப்பு மற்றும் மொத்த தொகையாகவும் டெபாசிட் செய்யலாம்.
11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – சென்னை ஐஐடியில் சேர ஒரு அரிய வாய்ப்பு!
மேலும் இந்த திட்டத்தில் அதிக லாபத்தை ஈட்ட நினைபவர்கள் நிதியாண்டின் ஆரம்பமான ஏப்ரல் 1 முதல் 4 க்குள் டெபாசிட் செய்ய வலியுறுத்தப்படுகிறது. இந்த நடைமுறையை மீதமுள்ள மாதங்களிலும் பின்பற்ற வேண்டும். மாதத்தில் 5 ஆம் தேதிக்குள் முதலீடு செய்தால், நல்ல வருமானத்தை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. PPF விதிகளின்படி, வட்டித் தொகை மாதந்தோறும் கணக்கிடப்படும். ஆனால் அது ஒவ்வொரு மாதமும் மாதத்தின் இறுதியில் வரவு வைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மாதத்தில் 5ம் தேதிக்கு முன் வைப்பு செய்யப்பட்டால், வட்டித் தொகை ஒரு மாதத்திற்கு செலுத்தப்படும். அதாவது, பிபிஎஃப் வட்டி விகிதம் ஒவ்வொரு மாதத்தின் 5ம் தேதி முதல் கடைசி நாள் வரை ஒரு நபரின் கணக்கில் குறைந்தபட்ச நிலுவை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.33,450/- வரை ஊதியம்!
ஆகையால், ஒரு நபர் ஆண்டின் எந்த நேரத்திலும் ஒரு பெரிய தொகையை டெபாசிட் செய்ய விரும்பினால், அந்த மாதத்தில் 5 ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது 5 ஆம் தேதியிலோ அவர் முதலீடு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது, ஆண்டுக்கு 7.1% வட்டி அளிக்கப்படுகிறது. மேலும் வருடம்தோறும் வட்டி கணக்கிடப்பட்டு, 15 ஆண்டுகளில் வட்டி தொகையுடன் முதிர்வு தொகையை பெறலாம் மேலும் வாடிக்கையாளர்கள் கணக்கை கட்டாய முதிர்ச்சி காலத்திற்கு பிறகும் கூடுதலாக 5 ஆண்டுகள் நீட்டித்து கொள்ளலாம். இந்த வட்டி விகிதத்தில் ஒருவர் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை வருமானம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.