Post Office சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 1 முதல் புதிய விதிகள்!
இந்திய அஞ்சல் துறையில் பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இந்த சேமிப்பு திட்ட விதிகளில் இன்று முதல் (ஏப்ரல் 1) புதிய மாற்றங்கள் வந்துள்ளது. அது என்னென்ன என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
இந்திய தபால் துறை வங்கிகளுக்கு இணையாக பல்வேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் வங்கிகளை விட அதிக லாபம் அளிக்க கூடிய வகையில் வட்டியும் அளிக்கப்படுவதால் மக்கள் அஞ்சலக திட்டங்களில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கு தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்கள் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். வருங்கால வைப்பு நிதி, கிராம சுரக்ஷா யோஜனா, செல்வ மகள் சேமிப்பு, மாதாந்திர வருமான திட்டம் போன்றவைகள் மக்களுக்கு அதிக லாபத்தை அளிக்கிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்? காங்கிரஸ் உறுதி!
மற்ற திட்டங்களை தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செல்வமகள் சேமிப்பு திட்டமும் உள்ளது. இதன் மூலம் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு பெற்றோர்கள் சேமிக்க தொடங்குகின்றனர். அதிகமானோர் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் அஞ்சல் துறையின் 3 சேமிப்பு திட்டங்களில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
TN TET தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – முழு பாடத்திட்டம் & தேர்வு முறை!
அதாவது சீனியர் சிட்டிசன் சேமிப்புத் திட்டம்,டேம் டெபாசிட் திட்டம், மாத வருமானத் திட்டம் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வட்டி தொகை பணமாக வழங்கப்படாது என்று அஞ்சல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் தபால் அலுவலக வங்கி கணக்கை இந்த சேமிப்பு கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு வட்டி தொகை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும் வட்டிக்கு, கூடுதல் வட்டி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.