NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு 2022 – நாளை கடைசி நாள்!
இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. நாளை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.
நீட் தேர்வு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் என்னும் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 12 ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும் கலந்தாய்வு மூலம் மாநிலம் முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடப்பாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை ஆகிய மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இதனையடுத்து ஏப்ரல் 2ம் தேதி நீட் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. மே 7ம் தேதி வரை மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
மொபைல் ஆப்ஸ் மூலமாக கடன் வாங்க நினைப்போர் கவனத்திற்கு – கூடுதல் சேவைகள் அறிமுகம்!
ஆயுதப்படை, நர்சிங் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை சுமார் 20 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். நாடு முழுவதும் ஜூலை 17-ந் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம், நேரம் போன்றவை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.