அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மோசடி எச்சரிக்கை! பாதுகாப்பது எப்படி?

ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் மீதான மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் பொருட்களை பாதுகாப்பாக பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் மோசடி

இப்போதெல்லாம் எங்கு பார்த்தாலும் மோசடி என்ற வார்த்தைகள் அதிகமாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவது துவங்கி ஆன்லைன் வரைக்கும் இந்த மோசடிகள் நீண்டு கொண்டு தான் செல்கிறது. இவற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் மோசடிகள் என்பது இன்னும் குறைந்தபாடில்லை. இதற்கிடையில் பொதுமக்களின் நலன் கருதி அரசாங்கம் இலவச ரேஷன் திட்டத்தை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ள நிலையில் சமீப காலமாக ரேஷன் மோசடிகள் அதிகரித்து வருகிறது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய நபர்களின் பெயரை இணைப்பது எப்படி?

அதாவது, கொரோனா தொற்று நிமித்தம் நாடு முழுவதும் உள்ள மக்களின் வசதிக்காக, அரசு இலவச ரேஷன் காலத்தை செப்டம்பர் வரை நீட்டித்துள்ளது. இதற்கிடையில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள பயனாளிகளுக்கு சரியான அளவு உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆப் சேல் கருவிகளை எலக்ட்ரானிக் தராசுகளுடன் இணைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளில் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

உண்மையில், FPS டீலர்கள் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (EPOS) மூலம் உங்களுக்கு குறைவான ரேஷன் அளவுடைய பொருட்களை வழங்கி மோசடி செய்யலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் டீலர் இரண்டு e-POS சாதனங்களை பயன்படுத்துகிறாரா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் இரண்டு இ-பிஓஎஸ் சாதனங்களை பயன்படுத்துவது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இந்த சாதனங்களை வைத்து தான் மோசடிகள் நடைபெறுகிறது. சமீபத்தில் கூட, டெல்லியில் உள்ள லக்ஷ்மி நகரில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

திருநெல்வேலி பொது சுகாதார துறையில் காத்திருக்கும் அரசு வேலை – ரூ.40,000/- வரை ஊதியம்!

அதாவது, உணவு வழங்கல் துறை அளித்துள்ள தகவலின் படி, டெல்லி லஷ்மி நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இரண்டு இ-பிஓஎஸ் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இது உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் இம்ரான் உசேன் அவர்களின் கவனத்திற்கு வரவே அவர் உணவுப் பொருள் வழங்கல் துறையின் விசாரணைக் குழு, எஃப்.பி.எஸ் இரண்டையும் முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அதனால் ரேஷன் கடையில் இருந்து இலவச ரேஷன் திட்டத்தை பயன்படுத்தி கொள்பவர்களாக இருப்பீர்கள் என்றால் நீங்கள் ரேஷன் வியாபாரி e-POS சாதனத்தை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், ரேஷன் டீலர் எவரேனும் 2 இ-பிஓஎஸ் கருவியைப் பயன்படுத்தினால் உடனடியாக அதைப் பற்றி புகார் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!