11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – சென்னை ஐஐடியில் சேர ஒரு அரிய வாய்ப்பு!

0
11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - சென்னை ஐஐடியில் சேர ஒரு அரிய வாய்ப்பு!
11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு - சென்னை ஐஐடியில் சேர ஒரு அரிய வாய்ப்பு!
11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு – சென்னை ஐஐடியில் சேர ஒரு அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இதையடுத்து சென்னை ஐஐடியில் தரவு அறிவியலுக்கான, இணைய வழி நிரலாக்கல், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இணைவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக பார்ப்போம்.

மாணவர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வழக்கம் போல நேரடி வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே மாத இறுதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரவு அறிவியலுக்கான, இணைய வழி நிரலாக்கல், இளநிலைப் பட்டப்படிப்பு உள்ளிட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

BECIL நிறுவன காலிப்பணியிடங்கள் – ரூ.33,450/- வரை ஊதியம்!

இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பட்டதாரிகள், பணிபுரியும் தொழில் வல்லுநர்களும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க உச்ச வரம்பு ஏதும் கிடையாது. இதற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் 4 பாடங்களில் 4 வார பாடநெறி உள்ளடக்கம் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அதாவது இதில் கணிதம், ஆங்கிலம், புள்ளிவிவரம் மற்றும் கணக்கீட்டு சிந்தனை உள்ளிட்ட பாடங்கள் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாட விரிவுரைகளைக் கற்று, அத்துடன் இணையத்தின் வாயிலாகவே தங்கள் கல்விப் பணிகளை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 4 வாரங்களுக்கு இந்த நடைமுறை இருக்கும். 4 வாரங்களின் முடிவில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) 34 சதவீதமாக உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

இந்த தகுதி தேர்வில் 50 சதவீதத் தேர்ச்சி பெற்ற அனைவரும் அடிப்படைப் பட்டத்திற்கு பதிவு செய்யலாம். இணையவழிப் பட்டப்படிப்பு அடிப்படை பட்டம், டிப்ளமோ பட்டம், இளநிலைப் பட்டப்படிப்பு உள்ளிட்ட மூன்று நிலைகளில் வழங்கப்படுகிறது. இதில் இணைந்தவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேறலாம். வெளியேறும் மாணவர்களுக்கு அடிப்படை சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் அல்லது இளநிலைப் பட்டப்படிப்பு சான்றிதழ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் தகவல்களை பெற onlinedegree.iitm.ac.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம். இதற்கு வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!