TNUSRB SI தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

0
TNUSRB SI தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
TNUSRB SI தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!
TNUSRB SI தேர்வு எழுதுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்புகள் வெளியீடு!

தேனி மாவட்டத்தில் நேரடி எஸ்.ஐ., எழுத்து தேர்வு நாளை (ஜூன் 25)ம் தேதி 5 மையங்களில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்த விவரங்களை காண விரும்பினால் இந்த பதிவை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளவும்.

எஸ்.ஐ., எழுத்துத்தேர்வு

தமிழகத்தில் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றினால் எந்த ஒரு அரசு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். சமீப காலமாக கொரோனா கட்டுக்குள் வந்த நிலையில் ஒவ்வொரு அரசு துறைகளில் இருந்து தேர்வுகள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது எஸ்.ஐ.,தேர்வுகளுக்கான காலியிடங்கள் மற்றும் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

அதன்படி, இந்த எஸ்.ஐ., எழுத்து தேர்வுகள் நாளை ஜூன் 25ம் தேதி அன்று தேனி மாவட்டத்தில் நேரிடியாக எஸ்.ஐ.,க்களுக்கான எழுத்துத்தேர்வு 5 மையங்களில் நடைபெறுகிறது என்று அறிவித்துள்ளனர். இதில் தேனி மாவட்டத்தில் விண்ணப்பித்த சுமார் 4,522 தேர்வர்கள் எழுத உள்ளார்கள் என்று அறிவித்துள்ளனர். இவர்களுக்கான முதல் நிலை எழுத்து தேர்வு காலை 10:00 முதல் 12:30 மணி வரையும், இரண்டாம் நிலை தேர்வு மாலை 3:30 மணி முதல் 5:10 வரை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

மத்திய கப்பல்படை தளத்தில் வேலைவாய்ப்பு – 338 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

தேனி வழியாக செல்லும் மதுரை ரோடு மேரி மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முத்துதேவன்பட்டி தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொடுவிலார்பட்டி கம்மவார் கல்லூரி வளாகத்தில் தேர்வுகள் நடப்படுகின்றன. இந்த தேர்வுக்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட காவலர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகளான காவலர்கள் கூறுகையில், தேர்வு மையத்திற்கு தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் அடையாள அட்டை, நீலம், கருப்பு நிற பேனா மட்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!