TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் பணியிட போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது.
TNUSRB PC:
தமிழக காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களை கொண்டு நிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கான தகுதித்தேர்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது TNUSRB தேர்வு வாரியம் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை போன்ற இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வை நடத்த உள்ளது. இந்த ஆண்டு 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் உள்ளது.
இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு கடந்த ஜூலை 7ம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு முதல் முறையாக காவலர் தேர்வில் தமிழ்மொழித் தகுதித் தேர்வும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தேர்வர்களுக்கு உதவும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (19.07.2022) பொது தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயனடையவும்.
TNUSRB PC பொதுத்தமிழ் SET 05(80)
Mock Test “WhatsApp Group” Join Now