TNUSRB PC தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – நாளை (ஆக.4) ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழகத்தில் காவல்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர்களுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது அதற்கான விண்ணப்பபதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினசரி ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது.
TNUSRB PC தேர்வு:
தமிழகத்தில் காவலர் பணிக்கான தேர்வுகளையும், உதவி ஆய்வாளருக்கான தகுதித்தேர்வுகளை சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை TNUSRB PC தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மாவட்ட, மாநகர, ஆயுதப்படை பிரிவுகளில் 2,180 காலியிடங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை பிரிவில் காலியிடங்கள் 1091, சிறை காவலர் பிரிவில் 161 காலியிடங்கள் மற்றும் தீயணைப்பாளர் பிரிவில் 120 காலியிடங்கள் என மொத்தம் இரண்டாம் நிலை காவலர் பணியில் 3,552 காலிப்பணியிங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான விண்ணப்பபதிவு கடந்த ஜூலை 7ம் தேதி தொடங்கியது. மேலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த TNUSRB PC தேர்வில் இந்தாண்டு முதல் தமிழ் மொழித் தகுதிதேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 100 வினாக்களில் 40% மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அடுத்ததாக பொது அறிவு பகுதியில் இருந்து 45 வினாக்களும், உளவியல் பகுதியில் இருந்து 25 வினாக்களும் இடம் பெறும். இந்த TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பித்தோர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் ஆன்லைன் மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (04. 08. 2022) general studies பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.