TNUSRB தேர்வு எழுதப்போவோர் கவனத்திற்கு – தேர்வு அறையில் மாற்றம்! முழு விவரங்கள் இதோ!
தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர்கள் எழுத்துத் தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில் தேர்வர்களுக்கு தேர்வு அறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேர்வு அறையில் மாற்றம்:
தமிழகத்தில் கடந்த மார்ச் 8ம் தேதி 444 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதற்கான, விண்ணப்பங்கள் ஏப்ரல் 7ம் தேதி வரை பெறப்பட்டன. இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளதால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். அதனால் போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டிகள் இருக்கும்.
விரைவில் ‘பாரத் பந்த்’, பள்ளிகளுக்கு விடுமுறை – போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முகப்புப் பக்கத்தில் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு என்பதை க்ளிக் செய்து, பதிவெண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.தேர்வுக்கான அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வின் போது கட்டாயம் அனுமதிச் சீட்டை எடுத்து வர வேண்டும். மேலும், அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில் 5200001 முதல் 5200763 வரை Enrolment Number உள்ள தேர்வர்களுக்கு ,தேர்வு அறை மாற்றப்பட்டு உள்ளது. முன்னதாக ஹால் டிக்கெட்டில் “ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரி, சென்னை – திருப்பதி ,நெடுஞ்சாலை, திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம்.‐ 631 209” என்று Venue ( தேர்வு அறை) வழங்கப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்த Venue மாற்றப்பட்டு, புதிய Venue “ஜிஆர்டி நிறுவனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலை, திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் – 631 209” என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது விண்ணப்பதாரர்களுக்கு தமிழ் மொழி தகுதித் தேர்வு( 03:30 PM to 05:10 PM), முதன்மை எழுத்துத் தேர்வு ( காலை 10.00 am to 12.30 am ) வரும் ஜூன் 25ம் தேதியும், துறை விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் ஜூன் 26ம் தேதியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.