TNUSRB தேர்வு எழுத இருப்போர் கவனத்திற்கு – தேர்வு மையத்தில் மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் காவல் துணை ஆய்வாளர் ( TNUSRB) பணியிடங்களுக்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 25 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்வு மையம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி ஏற்கனவே இருந்த தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.
உதவி காவலர் தேர்வு:
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் தமிழ் மொழித் தேர்வு ஆகியவை மூலமாக தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது வருகிற ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து 12.30 வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழ் மொழி தகுதி தேர்வானது வருகிற ஜூன் 25 ஆம் தேதி மதியம் 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வானது முதலில் திருவள்ளுர் மாவட்டம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அரசு கலை மற்றும் கல்லூரியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது தேர்வு நடைபெறும் மையம் மாற்றப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – ஜுன் 24 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதன் படி தற்போது புதிதாக வெளியிட்ட அறிவிப்பின் படி GRT பொறியியல் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்கள் சற்று குழப்பமடைந்து இருக்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதனால் அரசு பணி கனவுடன் இருக்கும் பலர் இந்த தேர்வுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.