TNUSRB தேர்வர்கள் கவனத்திற்கு – இட ஒதுக்கீடு ரத்து! அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களில் முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
இடஒதுக்கீடு ரத்து
மத்திய அரசாங்கம், ‘அக்னிபாத்’ என்ற திட்டத்தின் கீழ் ராணுவத்தின் முப்படைகளுக்கும் ஆட்சேர்ப்பு செய்வதாக வெளியிட்ட அறிவிப்பு கலவரத்தை தூண்டி இருக்கும் நிலையில், இப்போது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்வதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த வகையில் இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறப்பு காவலர் ஆகிய பதவிகளுக்கு அறிவிக்கப்பட்ட சுமார் 3552 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு (CAPF) சிறப்பு ஒதுக்கீடு அளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் (TNUSRB) கீழ் கான்ஸ்டபிள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் பணிகளுக்கான தேர்வில் BSF, CISF, ITBP மற்றும் SSB உள்ளிட்ட சில பிரிவுகளை சேர்ந்த பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் சுமார் 3,552 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட TNUSRBன் ஆட்சேர்ப்பில், முன்னாள் துணை ராணுவ வீரர்களுக்கு (CAPF) அளிக்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – சர்ச்சை குறித்து அமைச்சர் விளக்கம்!
இது குறித்து TNUSRB தலைவர் சீமா அகர்வால் கூறுகையில், மாநில அரசின் உத்தரவுபடி முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கப்படும் என்றும் CAPF வீரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படாது என்றும் விளக்கம் அளித்துள்ளார். இப்போது தமிழக அரசின் இந்த அறிவிப்பானது காவல்துறையில் சேருவதற்காக ராணுவப் பணியை ராஜினாமா செய்து வரும் துணை ராணுவப் படையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவிர இதன் மூலம் நூற்றுக்கணக்கான முன்னாள் துணை ராணுவ வீரர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கருத்துக்கள் எழுந்திருக்கிறது.