TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் வெளியீடு!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முழு விபரங்கள் வெளியீடு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முழு விபரங்கள் வெளியீடு!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முழு விபரங்கள் வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB), சப் இன்ஸ்பெக்டர் (SI) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான தற்காலிக அட்டவணையை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnusrb.tn.gov.in -யில் பார்க்கலாம்.

TNUSRB

தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக எந்த ஒரு துறையிலும் காலியிடங்களை நிரப்பப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா குறைந்து வந்த நிலையில் அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை அறிவித்து வருகின்றன. அதனடிப்படையில், சப் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ் பணிக்கு 444 காலியிடங்கள் இருப்பதால் அந்த காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் விண்ணப்பங்களை வெளியிட்டு இருந்தது. இதில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணிக்கு 399 காலிப் பணியிடங்களும், காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணிக்கு 45 காலிப் பணியிடங்களும் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழு, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மற்றும் பல்கலைக்கழகம் இவற்றில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருந்தால் இந்த பணியிடங்களுக்கு தகுதியாக முடியாது என்றும் அறிவித்துள்ளது.இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்த பட்சம் 20 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அடுத்த கட்ட மதிப்பீட்டிற்கு தகுதி பெற தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண்கள் கட்டாயம் எடுக்க வேண்டும்.

மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான தேர்வு செயல்முறையானது, எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெறும். பின்பு உடல் திறன் தேர்வு(PET) , உடல் அளவீட்டு தேர்வு(PMT) , சகிப்புத்தன்மை தேர்வு (ET)ஆகியவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்கு பிறகு Viva- Voce நடைபெறும். எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, Viva-Voce மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் வகுப்புவாரி இடஒதுக்கீடு முலமாக பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்தது. தேர்வுக்கான அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதாவது ஜூன் 25ம் தேதி 2022 அன்று காலை 10.00 முதல் 11.40 வரை தமிழ் மொழிக்கான தகுதித் தேர்வு திறந்த மற்றும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மதியம் 3.00 முதல் 5.30 வரை ஓப்பன் கேண்டிடேட்ஸ் மெயின் எழுத்துத் தேர்வு நடத்த உள்ளனர். ஜூன் 26ம் தேதி 2022 அன்று காலை 10.00 முதல் 1.00 வரை மெயின் எழுத்துத் தேர்வும் துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள் நடத்த உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!