TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – இப்படி படித்தால் வெற்றி உறுதி!
தமிழகத்தில், TNPSC குரூப் 4 VAO தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இருக்கின்ற குறைவான நாட்களில் தேர்வர்கள் எப்படி படிக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
TNPSC குரூப் 4 :
தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் இந்த தேர்வை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே போதும்.மேலும் எழுத்துத் தேர்வு 2 பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுத்தால் தான் விடைத்தாள் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்.
குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள், தமிழ் மற்றும் கணிதப்பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இந்த தேர்வில் பெரும்பாலும் வினாக்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் வருகிறது என்பதால், அவற்றை மட்டும் முழுமையாக, நன்றாக படித்தாலே தேர்வில் எளிதாக வெற்றிப்பெறலாம். அதேநேரம் பள்ளி பாடப்புத்தகங்களில் சிலபஸ்-க்கு ஏற்றவாறு உள்ள பாடங்களை மட்டும் படித்தால் போதும். மேலும் முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.
மத்திய அரசில் 10வது முடித்தவர்களுக்கான வேலை – முழு விவரங்களுடன் ….!
இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும். நமக்கு தேர்வுக்கான நாட்கள் குறைவாக இருப்பதால், தமிழ் புத்தகங்களை படிக்கும் போது, குறிப்பு எடுத்து படித்துக் கொள்ள வேண்டும். தமிழுக்கு அடுத்தப்படியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பகுதி வினாக்கள். இதையடுத்து நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படிக்க வேண்டும். மேலும் படித்ததை திரும்ப திரும்ப ரிவிஷன் செய்தால் தான், குறைவான நாட்களில் தேர்வில் வெற்றி பெறலாம்.