TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – சுவாரஷ்யமான கேள்விகள் குறித்த பதிவு!
தமிழகத்தில் இன்று TNPSC குரூப் 2, 2A தேர்வு நடைபெற்று வருகிறது . மேலும் குரூப் 4 தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் மாதிரி கேள்வி பதில்களை இப்பதிவில் பார்க்கலாம். இவை, தேர்வில் நீங்கள் நல்ல மதிப்பெண் பெற உதவும்.
சுவாரஷ்ய கேள்விகள்:
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பில், 7382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. TNPSC அறிவிப்பின் படி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அதில், ஆண் விண்ணப்பதாரர்கள் சுமார் 9,26,583 பேரும், பெண் விண்ணப்பதாரர் 12,58,616 பேரும், 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman) ஆகும். குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மேலும், குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.
SAI விளையாட்டு ஆணையத்தில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!
1. 1942 – ல் பர்மாவிலிருந்து புறப்பட்டு இந்தியா வந்து சேர்ந்ததை விவரிக்கும் மிகச் சிறந்த பயண நூலான ‘பர்மா வழி நடைப்பயணம்’ நூலின் ஆசிரியர் யார்?
(A) அநுத்தமா
(B) தேவன்
(C) வெ. சாமிநாத சர்மா
(D) வைத்தியநாத சர்மா
2. கீழ்கண்ட கல்வெட்டுகளில் மிகவும் பழமையானது எது?
(A) உத்திரமேரூர் கல்வெட்டு
(B) ஆதிச்சநல்லூர் கல்வெட்டு
(C) அரியாங்குப்பம் கல்வெட்டு
(D) திருநாதர் குன்றம் கல்வெட்டு
3. ‘முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை ‘- இதில் மகடூஉ என்பதன் பொருள் என்ன ?
(A)மகள்
(B)மகன்
(C)பெண்
(D) ஆண்
4. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?
(A) சைவரால் இயற்றப்பட்டன
(B) வைணவரால் இயற்றப்பட்டன
(C) சமணரால் இயற்றப்பட்டன
(D) கிறித்தவர்களால் இயற்றப்பட்டன
5. கீழ்க்கண்டவற்றில் கூடுகட்டி வாழும் பாம்பு எது?
(A) நல்ல பாம்பு
(B) இராஜ நாகம்
(C) பச்சைப் பாம்பு
(D) எதுவுமில்லை