TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஈஸியாக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - ஈஸியாக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு - ஈஸியாக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் கவனத்திற்கு – ஈஸியாக மதிப்பெண்கள் பெறுவது எப்படி?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், தேர்வுக்கு தயாராக இன்னும் குறைவான நாட்களே உள்ளன. எனவே, இருக்கின்ற குறைவான நாட்களில் எவ்வாறு தயாராவது? எப்படி படிப்பது? உள்ளிட்ட தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 300 மதிப்பெண்களில் 90 பெற்றால் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனவும், தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி & சம்பள உயர்வு!

குரூப் 4 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே தகுதி என்பதால் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். அடுத்தப்பகுதியாக, பொது அறிவு பகுதியிலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.

தேர்வுக்கு படிப்பது எப்படி:

  • குரூப் 4 தேர்வுக்கு இன்னும் குறைவான நாட்கள் மட்டுமே உள்ளதால், தேர்வுக்கு தயாராக நினைப்பவர்கள் முதலில், பாடத்திட்டத்திற்கு ஏற்றவாறு 6 முதல் 10 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை முதலில் வாங்கிக் கொள்ள வேண்டும்.
  • இன்னும் இருக்கும் நாட்களுக்கு படிக்கின்ற நேரத்தை முதலில் அட்டவணையிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்றாற்போல் தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கும், தினமும் 1 மணி நேரத்திற்கு கணிதப் பகுதிக்கும் ஒதுக்கி கொள்ள வேண்டும். மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படியுங்கள்.
  • முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. நாம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி இதுதான். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும்.
  • 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும்.
  • தமிழுக்கு அடுத்தப்படியாக நாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது கணித பகுதி வினாக்கள். இதில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடை அளிக்கலாம்.
  • அடுத்ததாக பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். அடுத்தப்படியாக நடப்பு நிகழ்வுகளுக்கு செய்தித்தாள்களை படியுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!