TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – ஜூலை 19ம் தேதி ஆன்லைன் மாதிரித்தேர்வு!
தமிழகத்தில் TNPSC குரூப் 4 & VAO தேர்வு இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தி வருகிறது.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் இந்தாண்டு குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வானது கிராம நிர்வாக அலுவலர், டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. இதில் குரூப் 4 தேர்வின் கீழ் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 7,382 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதில் தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் 2022ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். இதில் முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு, இரண்டாம் பகுதி பொது அறிவு பகுதி ஆகும். இந்த முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது கட்டாயம். அப்போது தான் அவர்களது மற்ற பாட வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும். தேர்வுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் நாளை (19 .07.2022) பொதுத்தமிழ் பாடத்திற்கான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
TNPSC Group IV:பொதுத்தமிழ் PREVIOUS YEAR 2(100)
Mock Test “WhatsApp Group” Join Now
TN Exam Mock Test “FB Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now