TNPSC குரூப் 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச மாதிரித்தேர்வு! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் குரூப் 4 & VAO தேர்வு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது.
மாதிரித்தேர்வு:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கு குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வானது கொரோனா தாக்கம் காரணமாக 2 வருடங்களாக நடைபெற வில்லை. இந்தாண்டு பாதிப்புகள் குறைந்து அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. அதில் அரசு துறையில் உள்ள 7,382 காலிப்பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது சுமார் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
தேர்வானது ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூலை மாதம் தொடங்கி விட்ட நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். பெரும்பாலும் குரூப் 4 தேர்வில் 6 – 10ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வில் முதல் பகுதியில் தமிழ்மொழித் தேர்வு வினாக்கள் வரும். அடுத்த பகுதியில் பொது அறிவு, நடப்பு வினாக்கள் இடம்பெறும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் குரூப் 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு உதவும் வகையில் அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ஜூலை 9 மற்றும் 16ம் தேதிகளில் மாதிரித்தேர்வு நடைபெற உள்ளது. மேலும் அங்கு அரசு போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் விண்ணப்ப படிவம் நகல், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.