TNPSC குரூப் 4 தேர்வு எழுதவிருப்பவர்கள் கவனத்திற்கு – முக்கிய தகவல்கள் இதோ!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 7000 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் எந்தெந்த பதவிகளுக்கு நடத்தப்படுகிறது, இத்தேர்வுகளை எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்பது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
குரூப் 4 தேர்வு
தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பல்வேறு பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. TNPSC என்பது தமிழக அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்புகளை, தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். இந்த அரசுப்பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசால் கடந்த 1929ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்போது அந்தந்த மாநில அரசு சேவைகளில் ஆட்சேர்ப்புகளை செய்வதற்கான அதிகாரம் அந்தந்த மாநில அரசுக்கு உண்டு.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் TNPSC மூலம் குரூப் 1 முதல் குரூப் 8 வரையுள்ள பல்வேறு பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தடைபட்ட போட்டித்தேர்வுகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இப்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இன்று (மே.21) குரூப் 2 மட்டும் 2A தேர்வுகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் வரும் மாதத்தில் குரூப் 4 தேர்வுகளையும் நடத்துவதாக அறிவித்துள்ளது.
Wipro நிறுவனத்தில் அருமையான வேலை – MBA பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..!
அந்த வகையில் ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், தட்டச்சர், ஸ்டெனோ-டைப்பிஸ்ட், கள ஆய்வாளர் மற்றும் வரைவாளர் உள்ளிட்ட 7,382 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் ஜூலை 24ம் தேதியன்று நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு செயல்முறைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், இத்தேர்வுக்கு சுமார் 21.85 லட்சம் பேர் விண்ணப்பங்களை செலுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், ஆண் விண்ணப்பதாரர்கள் 9,26,583 பேர், பெண் விண்ணப்பதாரர்கள் 12,58,616 பேர் மற்றும் 129 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.