TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் வருகிற 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை தேர்வு அறையில் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து வெளியிடுபட்டுள்ளது.

குரூப் 4 தேர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு வருடங்களாக எந்த ஒரு போட்டித் தேர்வும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது அனைத்து போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் வருகிற 24 ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த தேர்விற்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28 தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வந்த நிலையில் மொத்தம் 21,83,225 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடந்த 2019 ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 5 லட்சம் பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் TNPSC குரூப் 4 தேர்வு எழுதும் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டை தேர்வு வாரியம் கடந்த வாரம் அதிகாரபூர்வமாக இணையதளத்தில் வெளியிட்டது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கு எவ்வாறு ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் ஹால் டிக்கெட் ல் எதாவது பிரச்னை இருந்தால் எப்படி அதனை கையாளுவது குறித்த தகவல்களையும் குறிப்பிட்டுள்ளது. குரூப் 4 தேர்வாளர்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் (OTP) மூலமாக விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இனி வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

தேர்வர்கள் அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அனுமதி சீட்டு இல்லாவிட்டால் தேர்வறைக்குள் அனுமதிக்க மாட்டார்கள் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதுபவர்கள் தங்களது ஆதார் அட்டை/பாஸ்போர்ட்/ ஓட்டுநர் உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை/வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒலி நகல் எடுத்து வர வேண்டும். தேர்வர்களின் அனுமதி சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லை என்றால் கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம் ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில் ஒட்டி அதில் பெயர், முகவரி,பதிவுஎண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு ஏதேனும் ஒரு அடையாள சீட்டினை நகல் எடுத்து அதனுடன் இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்வாளர்கள் தங்களது அனுமதி சீட்டினை பாதுகாப்பாக வைத்து அடுத்த கட்ட தேர்வுக்கு உதாரணமாக (கலந்தாய்வு, சான்றிதழ் சரிபார்ப்பு) நேரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!