TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள தேர்வு முடிவுகள்!

0
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - விரைவில் வெளியாக உள்ள தேர்வு முடிவுகள்!
TNPSC குரூப் 2,2ஏ தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – விரைவில் வெளியாக உள்ள தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் குரூப் 2,2ஏ தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கால தாமதமாகிறது. இப்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படமால் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. மேலும் கால அட்டவணையில் குறிப்பிட்டபடி, குரூப் 2,2A பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அட்ராசக்க.. உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள Gmail-க்கு போட்டியாக வரும் Zmail – ZOOM நிறுவனத்தின் புதிய திட்டம்!

இதனை தொடர்ந்து இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வில் முதற்கட்டமாக முதல்நிலை தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி அன்று திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. இந்த முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் 1 பதவிக்கு 10 பேர் என்ற விகிதத்தில் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பின்பு முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் குரூப் 2,2A பணியிடத்திற்கான முதல்நிலை எழுத்து தேர்வு முடிவடைந்து 4 மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் தேர்வு எழுதியவர்கள் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்த வண்ணம் காத்திருக்கின்றனர். இதையடுத்து தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பை தேர்வு வாரியம் வெளியிட்டது. இதில் குரூப் 2,2A முதல்நிலை எழுத்து தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் எனவும், குரூப் 4 எழுத்து தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது. அதன்படி இன்றிலிருந்து எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!