TNPSC GROUP 2 தேர்விற்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – இறுதி கட்ட திருப்புதலின் முக்கியத்துவம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்து ஆர்வமுடன் தயாராகி வரும் தேர்வர்கள் இதுவரை தாங்கள் படித்ததை விட இந்த கடைசி ஒரு வாரத்தில் முக்கியமாக செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இறுதி கட்ட திருப்புதல்:
அரசு பணி என்பது காலம் காலமாக பட்டதாரி இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. தனியார் பணி என்பது நிரந்தரம் இல்லாத ஒன்றாக இருப்பதுவே இதற்க்கு முக்கிய காரணம். அரசு பணியில் பணியில் இருக்கும் போதும், பணிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட கிடைக்க கூடிய பலன்கள் மிகவும் பலனுள்ளதாக இருக்கிறது. இதனால் தான் அனைவருக்கும் அரசு பணி என்பது கனவாக இருந்து வருகிறது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அரசு பணிக்கு நியமனம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் அச்சுறுத்தல் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் அரசு பணியாளர்களை நியமிப்பதற்கான தேர்வுகளை அறிவித்துள்ளது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களின் கவனத்திற்கு – மத்திய அரசின் புதிய விதிகள்!
இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் GROUP 2 மற்றும் GROUP 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை அரசு அறிவித்தது. இதனால் பட்டதாரிகள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 5529 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை வரும் மே 21 ஆம் தேதி நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு தகுதி தேர்வுக்கு மொத்தம் 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்விற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் தேர்வர்கள் இறுதி நேர தயாரிப்பில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதில் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகும். தமிழ் மொழிப் பாடத்திலிருந்து 100 வினாக்கள் கேட்கப்படும்.
இவை மிகவும் எளிதாக மதிப்பெண்களை பெறுவதற்கான பகுதியாகும். இறுதி நேரத்தில் தேர்வர்கள் முழு பாட பகுதியையும் தயார் செய்து விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் புதிதாக எதையும் படிக்காமல் இருப்பதே நல்லது. இல்லையென்றால் இறுதி நேரத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திறனறி வினாக்கள் மற்றும் கணித வினாக்களை தினமும் பயிற்சி செய்ய வேண்டும். பொது அறிவு பாட பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது. மேலும், நன்றாக படிக்க கூடிய மாணவர்களுடன் கூட்டாக சேர்ந்து திருப்புதல் செய்வது சிறந்த முறையாகும். தினமும் ஒரு மாத நடப்பு நிகழ்வுகளை படித்துக் கொள்வது சிறந்தது. இது போல் தேர்வுக்கு தயார் செய்து உங்கள் கனவான அரசு வேலையை பெற்றுக் கொள்ளுங்கள்.