TNPSC குரூப் 2 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
குரூப் 2 தேர்வு கடந்த மே 21 ஆம் தேதியன்று நடைபெற்ற நிலையில் தற்போது தேர்வு முடிவு குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்பினரும் எவ்வளவு மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
குரூப் 2 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, 2A , குரூப் 4 முதலான தகுதித் தேர்வினை நடத்தி திறமையான பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் 5413 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப் 2, 2A தேர்வு கடந்த மே 21 ஆம் தேதியில் நடைபெற்றது. 11, 78, 000 பேர் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 9.94 லட்சம் பேர் தேர்வெழுதினர். மேலும், குரூப் 2 தேர்வு நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தேர்வு முடிவினை எதிர்பார்த்து தேர்வாளர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இதனிடையே, குரூப் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும், முதன்மை எழுத்துத் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும், ஜனவரி 2023ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும், பிப்ரவரி மாதத்தில் நேர்முகத்தேர்வு கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, குரூப் 2 தேர்விற்கான கட் ஆப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.
கொரோனோவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதி – மத்திய அரசு அறிவிப்பு
அதாவது, ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், மகளிர் மற்றும் அனைத்து வகுப்பையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது எனவும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் 130 கேள்விகளுக்கு மேல் சரியான விடையளித்திருந்தால் தேர்ச்சி பெற முடியும் எனவும், மற்ற பிரிவை சேர்ந்தவர்கள் 147 முதல் 150 வரை சரியான கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.