TNPSC குரூப் 2, 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கு மாதிரி தேர்வு வரும் 19ம் தேதி நடத்த இருப்பதாக அம்மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவித்து உள்ளார்.
போட்டி தேர்வுகள்:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டது. சென்ற வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொது தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் பல போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, tnpsc அறிவித்துள்ள குரூப், 1,2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து, அந்த தேர்வுகளை எதிர்நோக்க ஏதுவாக மேம்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி சிறந்த வல்லுநர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களின் மூலம் மாதிரி தேர்வுகள் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மேலும் இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் கொண்டவர்கள் கரூர் வெண்ணைமலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது அலுவலக தொலைபேசி 04324 -223555 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.