TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – அரசு சார்பில் இலவச பயிற்சி!
தமிழகத்தில் குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அரசு சார்பாக இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும் தற்போது TNPSC தேர்வுகள் அறிவித்தப்படி குரூப் 2,2ஏ, குரூப் 4 தேர்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் கால அவகாசம் முடிவடைகிறது.
அத்துடன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் இருப்பின் இதனை வருகிற ஆகஸ்ட் 27 முதல் 29 வரை திருத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதி அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வின் முதன்மை தேர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தற்போது தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
தமிழகத்தில் 10 ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
Exams Daily Mobile App Download
இவர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக சென்னையில் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பும் மாணவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஏ-28, முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 32 என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் விரும்பும் மாணவர்கள் 9361566648, 8072584856 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்