TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – நவ.13 இலவச மாதிரித்தேர்வு!
தமிழகத்தில் துணை ஆட்சியர் , உதவி ஆணையர் உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தட்டும் TNPSC குரூப் 1 தேர்வு வரும் 19ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரித் தேர்வு நடைபெறவுள்ளது.
TNPSC குரூப் 1:
தமிழகத்தில் துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பு ஆய்வாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வானது 2 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக முதல் நிலை தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு முதன்மை தேர்வு நடத்தப்படும்.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் நடப்பு ஆண்டு குரூப் 1 தேர்வின் கீழ் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான முதல் நிலைத்தேர்வு வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு கூட அனுமதி சீட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் விண்ணப்பதாரர்கள் இரவு பகலாக தேர்வை சிறப்பாக எழுத தயாராகி வருகின்றனர்.
புதிதாக டிவிட்டரில் தொடங்கியுள்ள பிரச்சனை – போலி கணக்குகள் அதிகரிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் குரூப் 1 விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக வரும் 13ம் தேதி இலவச மாதிரித்தேர்வு (Mock Test) நடத்தப்படவுள்ளது. இந்த மாதிரி தேர்வானது சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள விநாயகா மிஷன் மருந்தியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.