TNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம்!

0
TNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம்!
TNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு - கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம்!
TNPSC குரூப் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம்!

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நடத்தப்படுகிறது. அந்த வகையில் குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வு:

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் நடத்தப்படாத நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து ஒவ்வொரு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அதன் படி ஏற்கனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் 2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகளை நடத்தி முடித்துள்ளது. அதில் லட்சக்கணக்கானவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் ஜூலை 31 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்நிலையில் TNPSC தற்போது குரூப் 1 தேர்வுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது காலியாக உள்ள 91 பணியிடங்களுக்கு நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 தேர்வில் விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி குடிமை பணி, காவல் பணி, வணிக வரி பணி, கூட்டுறவு பணி, பொதுப்பணித்துறை ஆகியவற்றில் உள்ள துணை ஆட்சியர், துணை காவலர், உதவி ஆணையர், துணை பதிவாளார், உதவி இயக்குநர் , மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த குரூப் 1 முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் விண்ணப்பிக்க வணிகம்‌ மற்றும்‌ சட்டம்‌ இரண்டிலும்‌ பட்டம்‌ பெற்றவர்கள் தகுதியானவர்கள். அல்லது வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ, வணிகம்‌ அல்லது சட்டத்‌ துறையில்‌ பட்டம்‌ பெற்றவர்கள், வரி விதிப்பு சட்டங்களில்‌ டிப்ளமோ, பொருளாதாரம்‌, கல்வி, சமூகவியல்‌, புள்ளியியல்‌ அல்லது உளவியலில்‌ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமூக அறிவியல்‌, சமூகவியலில்‌ முதுகலை பட்டம்‌ அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர்‌ மேலாண்மை அல்லது தொழிலாளர்‌ நலனில்‌ அனுபவம்‌, கிராமப்புற சேவையில்‌ முதுகலை பட்டமும் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 1 வயது நிறைவடைந்தவராகவும்‌ 39 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் 2,05,700 வரை வழங்கப்படும், குரூப் 1 தேர்வுக்கு பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.150யும் முதனிலைத்‌ தேர்வு ரூ.100 யும் முதன்மை எழுத்துத்‌ தேர்வு ரூ.200யும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். எழுத்துத்‌ தேர்வு, முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு அடிப்படையில்‌ நேர்முக தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!